தமிழர் கடவுளான முருகன் தமிழ் பண்பாட்டுக்குகந்த முறையில் தமிழ்ப் பழங்குடியான குறவர் இனத்தை சேர்ந்த வள்ளியை காதல் திருமணம் புரிந்தான். இதை பொறுக்க முடியாத பார்ப்பனர் தேவந்திரன் மகளான தெய்வயானை என்கிற கற்பனை பாத்திரத்தை உருவாக்கி அவளைத்தான் முருகன் முதலில் மணந்ததாக கதையை மாற்றிவிட்டனர். இப்போது கந்தன் கதை கேட்போருக்கு வள்ளிதான் முருகனின் ஆசை நாயகி போலவும் தெய்வயானைதான் முறைப்படி மணந்த மனைவி போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி சதி செய்திருந்தனர். இப்போது வடபழனி கோவில் புதுபிக்கப்பட்ட போது அவர்களையுமறியாமல் அந்த சதி வெளியாகிவிட்டது. எப்படி என்கிறீர்களா? கோவிலுக்குப் பின்னால் இரண்டு திருமண மண்டபங்கள் கோவில் சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடத் தயாரக உள்ளன. ஒன்று பெரிய மண்டபம், இன்னொன்று சிறிய மண்டபம். பெரிய மண்டபத்துக்கு வள்ளி என்று பெயரிடப்பட்டுள்ளது. சின்ன மண்டபத்துக்கோ தெய்வயானை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே யார் பெரிய வீடு, யார் சின்ன வீடு என்று தெரிந்து விட்டதில்லையா?
பின்குறிப்பு: இந்த பதிவிற்கான இன்ஸ்பிரேஷன் இது.
http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_30.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment