Tuesday, June 26, 2007

பொறுத்தது போதும்

பொறுத்தது போதும். பொங்கியெழடா செல்வா என ஒரு குரல். வேற யாரு? நம்ம மனசாட்சியார்தான். எத்தனை நாளுக்குத்தான் நாமளும் அனானியாவே குப்பை கொட்டறது. அதுலயும் பாதிப்பேர் தயவு தாட்சின்யமில்லாம நம்ம கமென்ட்டுகளை தூக்கி கடாசற அராஜகத்தை இன்னும் எத்தனை நாளுங்க நானும் தாங்குவேன்? என்ன ஒன்னு, ப்லாக் வச்சு, பதிவு போட்டு அதுக்கு வர கமென்ட்களை பாத்து பக்குவமா பப்ளிஷ் பண்ணி, அதுல வர்ர கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி.... ஸ்ஸப்பா.... இப்பவே கண்ணக்கட்டுதே.. இருந்தாலும் என்ன பண்ண? எலி வளைன்னாலும் ஒரு தனி வளை வேணுமாமே. பெரியாளுங்கல்லாம் சொல்லி வச்சிட்டு போயிருக்காங்கோ. அதுனால இனிமேட்டு இங்கனதான் குந்தியிருந்து குப்பை கொட்டப்போறேன். பொறுத்தருள்க தமிழ் கூறு வலையுலகே....

No comments: