Tuesday, June 26, 2007
வந்தனம் வந்தனம் வந்தனம்
வந்த சனமெல்லாம் குந்தணும். நமக்கு தொழில் பொட்டி தட்டறது. இங்கன சென்னைலதான் பொட்டிய தட்டி அதுல வர்ர வருமானத்துல வயத்தை கழுவிக்கினு கீறேன். என்னமோ என் கெட்ட நேரமோ இல்லை இதை படிக்கற உங்க கெட்ட நேரமோ தெரியலை, ஒரு ராகு காலத்துல இந்த வலைப்பதிவு ஆரம்பிக்கற எண்னம் வந்து என் மண்டைக்குள்ற நண்டு கணக்கா பிராண்ட ஆரம்பிச்சுது. என்னாத்தனு சொல்வேனுங்க? ஆரம்பிச்சாச்சு இந்த பதிவ. எதைபத்தி எழுதறதுன்னு கூட இன்னும் முடிவு பண்ணலீங்கோ. ஆனாக்க ரெண்டு பதிவாயிடுச்சுங்க. இப்படி ஒப்பேத்தற சூட்சுமத்தை நான் நம்ம நண்பர்கள் சிலர்கிட்டேர்ந்துதானுங்க கத்துகிட்டேன். அதுக்காக ரொம்ப டென்ஷன் ஆயிடாதீங்க மக்கா. இப்படியே காலம் முச்சூடும் உங்களை வதைக்க மாட்டேன். எதுனா உருப்படியா எழுதிடறேன் கூடிய சீக்கிரம். நீ முதல்ல எழுதுடா மவனே, அது உருப்படறா மாதிரி இருக்கா இல்லையான்னு நாங்க சொல்றோம்னு நீங்க சவுண்டு விடறது கேக்குது. அதுனால இத்தோட நம்ம புராணம் இஸ்டாப். நாளைலேர்ந்து ஒழுங்கா பதிவு போடறேனுங்கோவ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment